கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி வண்டல் மண் சட்டிகளுடன் வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அதில் "கோவை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மற்றும் கிராவல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற நீர் நிலைகளிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தால் விவசாயிகள் பயனடைவார்கள். நீர் நிலைகளும் தூர்வாரப்படும்' என்றார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாய சங்கத்தினர் கையில் வண்டல் மண் சட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அதில் "கோவை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மற்றும் கிராவல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற நீர் நிலைகளிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தால் விவசாயிகள் பயனடைவார்கள். நீர் நிலைகளும் தூர்வாரப்படும்' என்றார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாய சங்கத்தினர் கையில் வண்டல் மண் சட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.