செய்தியாளர்கள் தங்கள் சித்தாந்தத்தை வெளிப்படுத்த வேண்டாம்: பயிற்சிப்பட்டறையில் பத்திரிகையாளர் வேலுச்சாமி பேச்சு



கோவை பிரஸ் கிளப் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7-வது பயிற்சிப்பட்டறை இன்று காலை கோவை பிரஸ் க்ளப் அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், தினமலர் நாளிதழின் செய்தியாளர் ரா.வேலுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'அரசியல் செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 



ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க எவ்வித பாதுகாப்பு சட்டமும் நம் நாட்டில் இல்லை. தற்போது, ஒரு சில மாநிலங்கள் மட்டுமே பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன.

ஒரு அரசியல் தலைவரிடம் கேள்வி கேட்பதற்கு முன் பத்திரிகையாளர்கள் நாட்டு நடப்பு குறித்த புதிய செய்திகளை அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் சில சங்கடமான சூழல்களை சந்திக்க நேரலாம்.



இன்றய காலகட்டத்தில் கேள்வி என்பது பதிலை பெறுவதற்காக கேட்கப்படுவதில்லை. மாறாக, ஒருவரை சிக்கலில் சிக்க வைப்பதற்காகவே கேட்கப்படுகிறது, இளம் பத்திரிகையாளர்கள் இந்த முறையை கைவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனது கருத்தை முழுமையாக தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதனால் ஒரு கேள்வி கேட்டபின்னர், அதற்கான முழுமையான பதிலை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு பின்னரே அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். அனைவருமே ஏதாவது ஒரு சித்தாந்தத்தை சார்ந்தவர்களாக அல்லது ஆதரிப்பவர்களாக இருப்போம். நடுநிலையான பத்திரிகையாளராக பணிபுரிய வேண்டுமென்றால், நமது சித்தாந்தத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது. அப்படி தெரிவித்தால், இருவித இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும். ஒன்று, நமது சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் கொண்ட அரசியல் பிரமுகர்கள், நம்மிடம் நெருக்கமாக பழகமாட்டார்கள். அதனால் நம்மை நம்பி உள்ள விஷயங்களை தெரிவிக்காமல் தவிர்த்துவிடுவார்கள். இரண்டாவது இழப்பு, நாம் எதிர்சித்தாந்தம் கொண்டவரைப் பற்றி உண்மையான செய்தி எழுதினால் கூட, அதை நம் கொள்கையை காரணம் காட்டி உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். அதனால் அனைத்து தரப்பினருடனும் நட்புடன் பழகி செய்திக்கான சோர்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியின் முடிவில் இளம் பத்திரிகையாளர்கள் சார்பில் மூத்த பத்திரிகையாளர் வேலுச்சாமிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...