கல்லட்டி மலைப் பாதையில் காவல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம்

உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப் பாதையில் காவல் துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டக் காவல் துறை, வனத் துறை மற்றும் நெஸ்ட் அமைப்பினர் இணைந்து இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாமை கல்லட்டி சோதனைச் சாவடி பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாம் ஒன்றினை நடத்தினர். இந்த முகாமை உதகை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன், மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமேனி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.



இந்த முகாமையொட்டி கல்லட்டி மலைப் பாதை முதல் மாவனல்லா பகுதி வரை சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். இப்பணியில் பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, பாம்பு கடித்தால் வனப்பகுதிகளில் இருந்து உதகை கொண்டுவர சுமார் இரண்டு மணி ஆகும். இதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் இம்முகாமின் போது, வனத்துறையினருக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. அந்த ஆயூர்வேத மருந்து உயிர் இழப்பு ஏற்படாமல்  இரண்டு மணி நேரம் பாதுகாக்கும் எனபது குறுப்பிடத்தக்கதாகும். இம்மருந்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் வடக்கு வன கோட்ட ரேஞ்சரிடம் வழங்கினார்.



இம்முகாம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் கூறியதாவது: சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. அதை வலியுறுத்தும் விதமாகவே இத்தகைய முகாம் நடத்தப்பட்டது. இனி, மாதந்தோறும் இத்தகைய முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...