கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளை மீட்டெடுக்கும் வகையில் இஎப்ஐ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் பேரூர் செல்வசிந்தாமணி குளம் மற்றும் முத்தன்னன் குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.


இந்த களப்பணியில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டு இரு குளங்களில் இருந்தும் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
