அங்கீகரிக்கப்படாத மனைகளை வரும் 03.11.2017-க்குள் வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் பொருட்டு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணை எண்.78, நாள். 04.05.2017– ல் தெரிவித்துள்ளபடி 20.10.2016 -க்கு முன்னர் பத்திரபதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் (அ) மனைகிரையம் பெற்றவர்கள் தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளவேண்டுமென கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனையிடங்களை உரிய ஆவணங்களுடன் www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் வழியாக உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தல் அவசியமானதாகும். ஆகவே, அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனையிடங்கள் 03.11.2017 தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேற்படி பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகள் மற்றும் மனையிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறை/உள்ளுர் திட்டகுழுமத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தனிப்பட்ட மனைகளை வரன்முறை செய்ய விண்ணப்பித்து மனைகளை வரன்முறை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனுமதியற்ற மனைப்பிரிவுகள்/மனைகளை வரைமுறைப்படுத்தும் மேற்படி திட்டதின் கீழ் வரைமுறைப்படுத்திய மனைகளுக்கு மட்டுமே எதிர்காலங்களில் கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகளை மாநகராட்சி மூலம் பெற்றுக் கொள்ள இயலும். மேலும், கூடுதல் விபரங்களுக்கு மாநகராட்சியில் 5 மண்டல அலுவலகங்களையும், பிரதான அலுவலகத்தையும் மற்றும் கோயம்புத்தூர் உள்ளுர் திட்டக் குழும அலுவலகத்தையும் அணுகி விபரம் பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...