கோவை மலுமிச்சம்பட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பொறியியல் கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கட்டிட நிலைப்புத்தன்மை சான்றிதழ் வாங்கித்தருவதாக சென்னையை சேர்ந்த சுந்தரம் என்பவர், கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் என்பவரிடம் கோரியுள்ளார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டிட நிலைப்புத்தன்மை குறித்த சான்றிதழை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுத்தருமாறு சுந்தரத்திடம் கேட்டபோது, அதன் பேரில் சான்றிதழ் ஒன்றினை கல்லூரிக்கு வழங்கினார். பின்னர் சான்றிதழை ஆய்வு செய்த போது பல்கலைக்கழகத்தின் பேரில் போலியான சான்றிதழ் கொடுத்து கல்லூரி நிர்வாகத்தை சுந்தரம் ஏமாற்றியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் சுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டிட நிலைப்புத்தன்மை குறித்த சான்றிதழை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுத்தருமாறு சுந்தரத்திடம் கேட்டபோது, அதன் பேரில் சான்றிதழ் ஒன்றினை கல்லூரிக்கு வழங்கினார். பின்னர் சான்றிதழை ஆய்வு செய்த போது பல்கலைக்கழகத்தின் பேரில் போலியான சான்றிதழ் கொடுத்து கல்லூரி நிர்வாகத்தை சுந்தரம் ஏமாற்றியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, கல்லூரி மேலாளர் சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் சுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.