துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் நலச்சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோயம்புத்தூர் மாநகராட்சியும் வர்தான் இன்ப்ராஸ்டக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமில் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு கண், பல், இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் ECG, Echo போன்ற இருதய சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் 650 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 112 நபர்களுக்கு கண் சம்பந்தமான நோயும், 246 நபர்களுக்கு பல் சம்பந்தமான பிரச்சனைகளும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை சம்பந்தமான பரிசோதனையில் 60 நபர்களுக்கும் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு ECG மற்றும் Echo எடுக்கப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநகராட்சியின் மற்ற மண்டலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகப்படுத்துவது குறித்தும், புகை பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவை தவிர்ப்பது குறித்தும் துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ராமைய்யா, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...