சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம்

கோவை மாநகரில், காந்திபுரம் பகுதியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்டக் குழு அலுவலகத்தின் மீது மதவெறிகொண்ட, சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மாற்றுக் கருத்துக்களையும், ஜனநாயக பூர்வமான விமர்சனங்களையும் அரசியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற, சங்பரிவாரக் கும்பல்களின் வன்செயல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அதன் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை தாக்கும் நடவடிக்கையில் ஒரு பிரிவு மதவெறிக் கும்பல் ஈடுபட்டதையும், மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்ற தமிழ்நாடு அரசின் கால்நடைத்துறை அலுவலர்கள், பசுப்பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதையும் கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை சகித்து கொள்ள முடியாத, சமூக விரோதக் கும்பல் கோவை மாவட்டக் குழு அலுவலகத்தை தாக்கியுள்ளது. பசுக் காவலர்கள், காதலர் கண்காணிப்புக் குழுக்கள், மதக் காவலர்கள் என்ற பெயர்களில் செயல்படும் வன்முறைக் கும்பல்களுக்கு ஆதரவுகாட்டும் மோடி அரசின் கொள்கைகள் வன்செயல்கள் அதிகரிக்க காரணமாகும். 

தமிழ்நாடு அரசு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் தப்பியோடிய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கண்டறிந்து, கைது செய்து, சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்பவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற வன்செயல்களுக்கு எதிராக இடதுசாரிகள், ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள், சமூக நல்லிணக்கம் காப்போர், அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...