ஓய்வு பெற்ற சப்-கலெக்டர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(60). ஓய்வு பெற்ற சப்-கலெக்டரான இவர் கடந்த 14ம் தேதி கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.  நிகழ்ச்சி முடிந்த பின்னர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரன் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 18 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து, சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படாததால் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில் ஒரு கைரேகை கண்டெடுக்கப்பட்டது.  இந்த கைரேகையை பிற குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றன.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...