மத்திய அரசு மிருகவதை சட்டத்தில் திருத்தம் செய்து புதிய உத்தரவு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. அந்த உத்தரவின்படி, நாடு முழுவதும் இனி மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் நாடெங்கிலும் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. பல கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்தும் வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் கடுமையான எதிர்ப்பினை நேரடியாக பதிவு செய்தன.

இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, சிலர் மாட்டின் தலையுடன் வந்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் மாட்டு தலையை பறிமுதல் செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் நாடெங்கிலும் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. பல கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்தும் வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் கடுமையான எதிர்ப்பினை நேரடியாக பதிவு செய்தன.

இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, சிலர் மாட்டின் தலையுடன் வந்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் மாட்டு தலையை பறிமுதல் செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
