கோவை மாநகராட்சியினை ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக மாநகராட்சி சார்பில் (சிட்டிசன்ஸ் ஆப்) குடிமக்களுக்கான செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான அனைத்து அறிவிப்பும் வெளியிடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில், காற்று மாசுபாட்டை கண்டறிய காற்று மாசுபாட்டு கருவிகள் 30 இடங்களில் அமைக்கப்படும். அதன்மூலம் எந்தெந்த இடத்தில் எவ்வளவு மாசு இருக்கிறது என்பது குறித்தும், வெப்பநிலை குறித்தும் தெரிந்து கொள்ளலாம். பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களிலும் நேர அட்டவணை மற்றும் கோவையில் எந்தெந்த இடத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனையும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதனை பதிவிறக்கம் செய்தால் போதும், கோவையில் அனைத்து தகவல்களும் அறியலாம். இதன் மூலம் பொதுமக்களும் தங்களது ஆலோசனைகளை மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில், காற்று மாசுபாட்டை கண்டறிய காற்று மாசுபாட்டு கருவிகள் 30 இடங்களில் அமைக்கப்படும். அதன்மூலம் எந்தெந்த இடத்தில் எவ்வளவு மாசு இருக்கிறது என்பது குறித்தும், வெப்பநிலை குறித்தும் தெரிந்து கொள்ளலாம். பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களிலும் நேர அட்டவணை மற்றும் கோவையில் எந்தெந்த இடத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனையும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதனை பதிவிறக்கம் செய்தால் போதும், கோவையில் அனைத்து தகவல்களும் அறியலாம். இதன் மூலம் பொதுமக்களும் தங்களது ஆலோசனைகளை மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.