பயிற்சி வகுப்பு நடத்த முறையான திட்டமிடல் இல்லை என்று கோவை அரசு மருத்துவமனை முன்பு உதவி மருத்துவர்கள் தர்ணா

பயிற்சி வகுப்புக்கு முறையான திட்டமிடல் இல்லாமல் தங்களை சிரமப்படுத்துவதாகக் கூறி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து கோவை அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.



108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை புத்துணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு இன்றும், நாளையும் பயிற்சி வகுப்பு நடத்த கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவித்திருந்த பயிற்சி வகுப்பு மதியம் வரையில் தொடங்கப்படவில்லை. இதனால், இந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருந்த 60-க்கும் மேற்பட்டோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும், மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு தங்கும் இடத்தை கூட ஏற்பாடு செய்து தரவில்லை என்றும், போதிய அடிப்படை வசதிகள் கூட செய்து தராததால் பெண் உதவி மருத்துவர்கள் அவதியுற்றனர் என்றும் கூறி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ரயில்நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப்-யில் அவர்களுக்கான பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த தர்ணா போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...