காவல்துறையினரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவன், மனைவி புகார்

புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பட்டான், இவரது மனைவி கமலா. இவர்களுக்கு தங்கராஜ், செந்தில்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தங்கராஜ்-க்கும் ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே, தங்கராஜ்-க்கும், அவருடன் பணியாற்றி வந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மாயமாகிய நிலையில், தங்கராஜை தேடிவரும் அன்னூர் போலீசார் பட்டானையும், அவரது குடும்பத்தினரையும் கண்மூடித்தனமாக தாக்குவதாக குற்றம்சாட்டி இன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 



இது குறித்து பட்டான் கூறியதாவது:- எனது மகன் மாயமானது முதல் தினமும் நள்ளிரவில் போலீசார் எங்கள் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் இருக்கும் என்னையும், எனது இளைய மகன் செந்தில்குமாரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர்.

போலீசார் தாக்கியதில் எனது இடது கண்ணில் குறைபாடு ஏற்பட்டுவிட்டது. மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் எனது இளைய மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் இதுவரை விடுவிக்கவில்லை. தங்கராஜ் இருக்கும் இடத்தை கேட்டு அடித்து கொடுமைப் படுத்திவருகின்றனர். தங்கராஜ் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது என்று கூறினாலும், அதனை போலீசார் நம்பாமல், எனது அண்ணன் மகன் உட்பட அனைவரையும் விசாரணை என்ற பெயரில் கூட்டிச்சென்று அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.



இந்த பிரச்சனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்".  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...