மத்திய அரசு புதியதாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு 18 சதவிகிதம் வரை வரி விதித்துள்ளதைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருபதுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெயில் தட்டச்சு இயந்திரங்களுக்கு 18 சதவிகிதம் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான பிரெயில் கடிகாரங்கள், காகிதங்கள், காது கேளாதோருக்கான காதொலி கருவி போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவிகித வரி மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் ஊன்றுகோல், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கால்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவிகித வரியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை முழக்கமிட்டனர்.
மேலும், திரைப்படம், தங்க நகை போன்றவற்றிற்கு விதித்த ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்ததைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களின் வரியையும் குறைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெயில் தட்டச்சு இயந்திரங்களுக்கு 18 சதவிகிதம் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பார்வையற்றோருக்கான பிரெயில் கடிகாரங்கள், காகிதங்கள், காது கேளாதோருக்கான காதொலி கருவி போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவிகித வரி மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் ஊன்றுகோல், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செயற்கை கால்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவிகித வரியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை முழக்கமிட்டனர்.
மேலும், திரைப்படம், தங்க நகை போன்றவற்றிற்கு விதித்த ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்ததைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களின் வரியையும் குறைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.