அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஓதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சிரூபவ் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற்பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதிரூபவ் வயது வரம்பு இட ஓதுக்கீடு ஆகியவை இணையதளத்திலுள்ள விளக்க கையேட்டில் (PROSPECTUS) தரப்பட்டுள்ளன.
10.05.2017 முதல் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் விளக்க கையேட்டினை மாணவர்கள் பார்வையிடலாம். மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலையம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்ததெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் என்ற விபரம் தரப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரலின்படி மாணவர்கள் Single window முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்ப்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சிரூபவ் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற்பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதிரூபவ் வயது வரம்பு இட ஓதுக்கீடு ஆகியவை இணையதளத்திலுள்ள விளக்க கையேட்டில் (PROSPECTUS) தரப்பட்டுள்ளன.
10.05.2017 முதல் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் விளக்க கையேட்டினை மாணவர்கள் பார்வையிடலாம். மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலையம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்ததெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் என்ற விபரம் தரப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரலின்படி மாணவர்கள் Single window முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்ப்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தெரிவித்தார்.