உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. இராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற இம்முகாமை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தொடங்கி வகித்தார். இராமகிருஷ்ணா மருத்துவமனையின் முதன்மையர் சுகுமார் மற்றும் இயக்குநர் டாக்டர்.ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான விஸ்வநாதன், பேராசிரியர் பிரகதீஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான விஸ்வநாதன், பேராசிரியர் பிரகதீஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.