ஆனமலைஸ் கென்னல் கிளப் நடத்தும் அனைத்து வகையான 2வது நாய் கண்காட்சியை கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வரும் ஜூன் 18ம் தேதி நடக்கிறது. இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் நாய்கள் உள்நாட்டில் மட்டுமின்றி, பலவகையான நாய்கள் வெளிநாடுகளில் இருந்தும் கொண்டுவரப்பட்டு இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. பார்வையாளர்களை பரவசமூட்டும் இந்த கண்காட்சியில் பெயர் பெற்ற பல ரக நாய்கள் இடம்பெறுகின்றன. மிகவும் உயரமான கிரேட் டான் நாய் முதல் மிகவும் சிறிய வகை சிகுவா நாய் இதில் கலந்து கொள்ளவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து டாய் மினியேச்சர் பிஞ்சர், சைனீஸ் பக், அமெரிக்கன் அகிடா, புல்மாஸ்டிப், டாபர்மேன் பின்ஸ்சர், ஜியன்ட், செயின்ட், பெர்னார்ட், ரோட்வெய்லர், விப்பெட், ஆப்கான் ஹவுன்ட், பீக்லே என பலவகை இரகங்களில் நாய்கள் இடம் பெறுகின்றன.

இதில், உள்நாட்டு இரகங்களான ராஜபாளையம், கோம்பை, கன்னி, முதோல் ஹவுன்ட், சிப்பிபாரை, ராம்பூர் ஹவுன்ட் போன்றவை இடம்பெறுகின்றன. இவ்வகை நாய்கள் வெளிநாட்டு ரகங்களை விட இவை சிறப்பு வாய்ந்தவை. இக்கண்காட்சியினை ஆனமலைஸ் கென்னல் கிளப் தலைவர் ரவி மற்றும் துணைத் தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெறுகிறது.

இதில், உள்நாட்டு இரகங்களான ராஜபாளையம், கோம்பை, கன்னி, முதோல் ஹவுன்ட், சிப்பிபாரை, ராம்பூர் ஹவுன்ட் போன்றவை இடம்பெறுகின்றன. இவ்வகை நாய்கள் வெளிநாட்டு ரகங்களை விட இவை சிறப்பு வாய்ந்தவை. இக்கண்காட்சியினை ஆனமலைஸ் கென்னல் கிளப் தலைவர் ரவி மற்றும் துணைத் தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெறுகிறது.