அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட லிங்கனூர் சாலை, அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகள், துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவது, கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டார்.





மேலும், அப்பகுதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சிப் பூங்காவின் நடைபாதை பணிகள், சுற்றுசுவர்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதையும், நீர்தேக்கத் தொட்டியின் நீரின் தன்மை குறித்து ஆய்வு செய்து, குளோரின் அளவு போதுமான அளவு உள்ளதா என்பதையும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன், துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.





Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...