கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஏழாம் தேதி ஊதியமானது வழங்கப்பட வேண்டி உள்ளது. ஆனால் பெரும்பாலான மாதங்களில், சரியான நேரத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தின் உள்ளே துப்புரவுப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, உடனடியாக விரைவில் ஊதியம் வழங்கவும், பணிப் பலன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனைக் கண்டித்து இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தின் உள்ளே துப்புரவுப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துப்புரவுப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, உடனடியாக விரைவில் ஊதியம் வழங்கவும், பணிப் பலன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.