கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. மாறாக மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்திற்கு 1 லோடு தண்ணீர் வழங்க 2600 ரூபாய் கொடுக்க வேண்டும் என பதில் கடிதத்தினை நீதிமன்ற நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

நாள் ஒன்றிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குறைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்லும் நிலையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்கோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

மாநகராட்சி நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாநகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...