கோவை மாநகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 292 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுதாவது:-
கோவை மாநகரில் முக்கிய சந்திப்புகள் மற்றும் விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து போலீசார் தணிக்கை மேற்கொண்டிருந்தனர். கடந்த 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த தணிக்கையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 292 வாகன ஓட்டிகளின் மீது மோட்டார் வாகன சட்டபிரிவு 185-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுதாவது:-
கோவை மாநகரில் முக்கிய சந்திப்புகள் மற்றும் விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து போலீசார் தணிக்கை மேற்கொண்டிருந்தனர். கடந்த 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த தணிக்கையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 292 வாகன ஓட்டிகளின் மீது மோட்டார் வாகன சட்டபிரிவு 185-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.