வால்பாறையில் கடும் பனிப்பொழிவு- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறையில் கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் பருவ மழை சரிவர பெய்யாததால் சுற்றுவட்டாரப் பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கின. வால்பாறையை நீராதாரமாகக் கொண்ட பல அணைகளும் வறண்டு காணப்பட்டன. 

குறிப்பாக, கடந்த ஆண்டு வால்பாறை பகுதியில் பருவமழை ஏமாற்றி விட்ட நிலையில், ஆறுகள் வறண்டு விட்டன. குடிதண்ணீருக்குக் கூட பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். வால்பாறை பகுதியில் உள்ள சோலையார் அணை, நல்லார் அணை, பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வால்பாறையில் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்யத் துவங்கியது. இதனிடையே தற்போது குளிர்ந்த காற்றுடன் கடும் பனியும் பொழிந்துவருகிறது.

வால்பாறைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளதால் இன்று காலை ஆழியார் முதல் வால்பாறை சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். வால்பாறை மலையில் உள்ள தேயிலை தோட்டங்களையும் பனிமூட்டம் மூடியுள்ள நிலையில் அதன் பிரமிப்பு மிக்க காட்சியினை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

எஸ்டேட் பகுதிகளில் இரவு, பகல் என கடும் குளிர் நிலவுவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், தொழிலாளர்கள் அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...