3 ஆண்டுகளுக்கான நலத்திட்டங்களின் வரை அறிக்கைகளுடன் தமிழக அரசு மத்திய அரசை அணுகினால் உடனடியாக நிதி ஒதுக்கி தரப்படும் - அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேட்டி

3 ஆண்டுகளுக்கு தேவையான நலத்திட்டங்களுக்கான வரை அறிக்கைகளுடன் தமிழக அரசு மத்திய அரசை அணுகினால் உடனடியாக நிதி ஒதுக்கி தரப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெற்ற அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தலைப்பிலான மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தொழில்துறையினரிடையே உரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது:-

முந்தைய ஆட்சி காலத்தில் 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல்கள் புரையோடிப்போயிருந்ததாக குற்றம்சாட்டிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசின் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். மத்தியில் திறைமையான தலைவர், நிலையான ஆட்சி நடைபெறுவதாக கூறிய அவர் மத்திய அரசின் பல்துறை சாதனைகளையும் பட்டியலிட்டார். 



மத்தியபிரதேசத்தில் உற்பத்தி அதிகரித்துள்ள போதும் தேவை குறைந்துள்ளதே விவசாயிகளின் பிரச்சனை எனவும் குறிப்பிட்டார். வளர்ச்சி என்பதுதான் பிரதமர் மோடியின் முக்கிய இலக்கு எனக்கூறிய அவர் புதிய இந்தியாவை அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். 

அடுத்த 2 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள 50 நகரங்கள் கூடுதலாக விமான சேவை மூலம் இணைக்கப்படும் என தெரிவித்த அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கூடுதலாக பலர் வருமான வரி செலுத்த முன்வந்துள்ளதால் தற்போது வருமான வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...