கோவையில் யானைகள் தொடர்பான பிரச்சனை குறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளதாக எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் பேட்டி


கோவை மாவட்டம் மதுக்கரை, தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 18 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து சேதங்களையும் ஏற்படுத்தி வந்தது. மேலும், 3 வளர்ப்பு மாடுகளையும், 1 ஆடுவையும் இது தாக்கியது.

இதனைத்தொடர்ந்து, இந்த யானை கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுத்து காட்டுக்குள் விரட்டும் முயற்சியாக கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த யானை மதுக்கரை அருகேயுள்ள அய்யாசாமி மலைப்பகுதியிலேயே சுற்றி வந்தது.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அந்த யானை உடல் நலக்குறைவினால் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர்  யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வனக்கோட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 11 யானைகள் உயிரிழந்து இருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், யானை இறந்த இடத்தை பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "யானைகள் கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. அதற்கான போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யானைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வருகின்ற சட்டப்பேரபை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன்" என தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...