கோவை மாநகராட்சியில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோவை மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் கையிருப்பு மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பறிமுதல் மற்றும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த 2017 ஜூன் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 437 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மொத்தம் 660 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (மே 9) பறிமுதல் செய்யப்பட்டு அபராதமாக ரூ.78 ஆயிரம் விதிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் கையிருப்பு மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பறிமுதல் மற்றும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த 2017 ஜூன் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 437 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மொத்தம் 660 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (மே 9) பறிமுதல் செய்யப்பட்டு அபராதமாக ரூ.78 ஆயிரம் விதிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.