ஏடிஎம் மூலம் மாத ஊதியம் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவகம் அருகே இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு அறிவித்தபடி ஏடிஎம் மூலமாக மாத ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகின்ற பணத்தை பணியாளர்களது கணக்கில் வரவு வைத்து விவரம் சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி மூலம் கொண்டுவரப்படும் பொருட்களை எடைபோட்டு வாங்க எடைதராசினை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நடைமுறைபடுத்த வேண்டி ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நியாயவிலைக் கடையில் தேங்கிக்கிடக்கும் காலி சாக்குகளை விற்பனை செய்வதற்கு சீரான விற்பனை கொள்கை வேண்டும் எனவும், அனைவருக்கும் சீரான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.
அரசு அறிவித்தபடி ஏடிஎம் மூலமாக மாத ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகின்ற பணத்தை பணியாளர்களது கணக்கில் வரவு வைத்து விவரம் சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரி மூலம் கொண்டுவரப்படும் பொருட்களை எடைபோட்டு வாங்க எடைதராசினை கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நடைமுறைபடுத்த வேண்டி ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக அரசு நியாயவிலைக் கடை பணியாளர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நியாயவிலைக் கடையில் தேங்கிக்கிடக்கும் காலி சாக்குகளை விற்பனை செய்வதற்கு சீரான விற்பனை கொள்கை வேண்டும் எனவும், அனைவருக்கும் சீரான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.