மின்சாரம் தாக்கி உயிரிழந்த அண்ணன், தங்கை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை மாவட்டத்தில் கடந்த புதனன்று பரவலாக கன மழை பெய்தது. இதில, உக்கடம் பகுதியில் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் சல்மான் (18), பானுமா (16) ஆகிய அண்ணன், தங்கைகள் உயிரிழந்தனர்.

அவர்களது உடலை மீட்ட உக்கடம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தோரின் உடலை வாங்க மறத்து அவர்களது உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து, உறவினர்களுடன் கோவை வடக்கு வருவாய்த் துறை கோட்டாட்சியர் சின்னசாமி மற்றும் வடக்கு வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 3 லட்சம் என 6 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...