உள்ளாட்சி தேர்தலில் தீர்வு கிடைக்குமா? சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் மாநகராட்சியின் சார்பில் நடைபெறவேண்டிய பல்வேறு பணிகள் நடைபெறாமல் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு கழிந்தும் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள 100 வார்டுகளில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வார்டுகளில் மாமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் மாநகராட்சி அலுவலர்களும் மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக 17-வது வார்டுக்குட்பட்ட மருதமலை சாலை சியோன் நகர் கிழக்கு ஐ.ஓ.பி காலனியில் சாலை மற்றும் தெருவிளக்கு வசதி இன்றுவரை இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து ஐ.ஓ.பி காலனி குடியிருப்புவாசிகள் சங்க துணைத் தலைவர் அர்புத்ராஜ் கூறுகையில்; 

இப்பகுதியில் இதுவரை சாலை வசதி மற்றும் தெரு விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சாலை வசதிக்காக கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான மேற்படி வேலைகள் நடைபெறவில்லை. கற்கள் சாலைகளில் தற்போது வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அருகில் கோயமுத்தூர் டையாபட்டிஸ் பவுண்டேஷன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களின் மூலம் நோயாளிகள் வரும் நிலையில், குண்டும், குழியுமான இந்த சாலையால் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் வருபவர்களும் பெரும் சிரமப்படுகின்றனர்.

மேலும், இந்த வார்டு வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் இரவு நேரங்களில் இப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளன. இங்கு தெரு விளக்கு இல்லாத நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழல் நிலவி வருகிறது. 

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமாரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு மனு அளித்தோம். இதனால் எவ்வித பலனும் இல்லை. மாநகராட்சி அலுவலகத்திலும் மனு அளித்தும் இன்னும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.

இது குறித்து மாநகராட்சி பொறியாளரிடம் தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்கவில்லை. மேற்கொண்டு உதவி பொறியாளர் கருப்புசாமி பேசுகையில்; இப்பகுதி வேலைப்பணிக்கு இன்னும் செலவின மதிப்பீடு உறுதி செய்யப்படவில்லை எனவும், மேலும் தகவலுக்கு மற்ற அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...