கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் குளிர்ந்த காற்றுடன் பரவலாக மழை பெய்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் நிலவி வந்தது. மேலும், அனைத்து குளங்களும் வறண்டு மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இன்று பகல் 1 மணியளவில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது.
மேலும் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், நரசிபுரம், பேரூர், மாதம்பட்டி, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழை விவசாய நிலங்களை பொழிவுபெற செய்துள்ளது.
இம்மழையினால் கோவை மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் நிலவி வந்தது. மேலும், அனைத்து குளங்களும் வறண்டு மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவையில் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இன்று பகல் 1 மணியளவில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது.
மேலும் புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், நரசிபுரம், பேரூர், மாதம்பட்டி, துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழை விவசாய நிலங்களை பொழிவுபெற செய்துள்ளது.
இம்மழையினால் கோவை மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.