பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை

ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் இன்று மாலை ஈரோட்டில் நதிநீர் இணைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காகவும், ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு திமுக-வினர் வாழ்த்து முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதையடுத்து அவர் கார் மூலம் ஈரோடு புறப்பட்டுச் சென்றார். ஈரோட்டில் குளம் தூர்வாரும் பணி துவக்க நிகழ்ச்சி, பன்னீர்செல்வம் பூங்காவில் புதிதாக திறக்கப்பட உள்ள பெரியார், அண்ணா சிலைகளை பார்வையிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...