கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இரும்பறை கிராமம் பெரியகோட்டம் புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரியால் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடந்த 5 ஆண்டுகளாக அப்பெரியகோட்டம், புதூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரியில், ஆழ்துளையிட்டு வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்படுவதால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மோட்டார்கள் அறுந்து விழுகின்றன. ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் ஒலியினால் காற்று மாசடைவதுடன், வேளாண் பொருட்கள் பாலாகி சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்களால் அப்பகுதி சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதுபோன்று பல பிரச்சனைகள் உள்ளதால் தங்களின் வாழ்வாதராம் கேள்விக்குறியாகி வருகிறது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அந்த ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கடந்த 5 ஆண்டுகளாக அப்பெரியகோட்டம், புதூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரியில், ஆழ்துளையிட்டு வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்படுவதால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மோட்டார்கள் அறுந்து விழுகின்றன. ஆலையிலிருந்து வெளியேறும் புகை மற்றும் ஒலியினால் காற்று மாசடைவதுடன், வேளாண் பொருட்கள் பாலாகி சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்களால் அப்பகுதி சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதுபோன்று பல பிரச்சனைகள் உள்ளதால் தங்களின் வாழ்வாதராம் கேள்விக்குறியாகி வருகிறது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள அந்த ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.