கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராக்கிபாளையத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அம்மனுவில், ராக்கிபாளையத்தில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும். ராக்கிபாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அம்மனுவில், ராக்கிபாளையத்தில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும். ராக்கிபாளையம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.