உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்களை இணைப்பது என்பதை மையக்கருத்தாக கொண்டு இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவை- அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரம் அறக்கட்டளை மற்றும் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் மருத்துவ மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை நடும் பணிகளை மேற்கொள்வதாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மரங்களை நட வேண்டுமெனவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்களும் இணைய வேண்டுமென்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையொட்டி கோவை- அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரம் அறக்கட்டளை மற்றும் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் மருத்துவ மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை நடும் பணிகளை மேற்கொள்வதாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மரங்களை நட வேண்டுமெனவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்களும் இணைய வேண்டுமென்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.