‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

கோவை ரேடியோ சிட்டி நடத்தும் ஆடியோ பிரிமியர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஞாயிறன்று மாலை 5 மணியளவில் கோவை, புரூக்பீல்ட் வணிகவளாகத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வெளிவரவிருக்கும் ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி கலந்து கொண்டு ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இசை தட்டியினை வெளியிட்டார்.



சுந்தர்.சி தயாரிப்பில் “ஹிப் ஹாப் தமிழா” ஆதி கதாநாயகனாக முதல் முறையாக நடித்துள்ள இந்த படத்திற்கு ‘மீசைய முறுக்கு’ என்று பெயரிட்டுள்ளனர். ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதோடு அந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் உள்ளிட்டவற்றை எழுதி, இசை அமைத்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆதி. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.



இத்திரைப்படத்தை அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையிலான காமடி, கருத்து, காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கல்லூரி கதையாக இருக்கும் என்றும், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆதி, அவருடைய ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அவர் உருவாக்கும் இண்டிபெண்டென்ட் மியூசிக் வீடியோவில் அவரே நடித்து அவரே தான் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...