மாட்டு இறைச்சிக்கு தடையை எதிர்த்து அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சில குறிப்பிட்ட கால்நடைகளை வெட்டத் தடை விதித்து, விவசாயிகள், தலித்துகள், சிறுபான்மை மக்கள் ஆகியோருக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து ஒட்டு மொத்த மக்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை, ஆத்துப்பாலம் பேருந்து நிலையத்தின் அருகில் இன்று மதியம் 2.30 மணிக்கு துவங்கியது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள கால்நடை விற்பனை தடை சட்டத்தின் மூலம் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை விற்கப்படுவதையும், வெட்டப்படுவதையும் தடை செய்து நாட்டில் மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலையை செய்துள்ள மோடி தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் பேசுகையில், இந்திய நாட்டில் 80 சதவிகிதம் மக்களின் உணவு முறையான மாட்டு இறைச்சியை தடை செய்வது அவர்களின் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகும். உணவு உண்பது என்பது தனிமனித உரிமை, அதில் எந்த அரசும் தலையிட முடியாது. மேலும் நம் நாட்டில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவரும் விவசாய மக்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு மென்மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக இச்சட்டத்தை அறிவித்துள்ளது. பசு பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டின் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மீது நடத்தப்படும் வன்முறையை ஊக்குவிக்கும் விதமான இந்த மக்கள் விரோத சட்டத்தை பாஜக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.



மேலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேரளா, புதுச்சேரி, கர்நாடக அரசுகளை போன்று தமிழக சட்டமன்றத்திலும் மத்திய அரசின் கால்நடை விற்பனை தடை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோவை மாவட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.



இதில் திராவிட அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், மாணவர், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...