கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் செங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கரை அமைக்கும் பணி துவக்கம்


கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவையில் அமைந்துள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த தன்னார்வ அமைப்பில், 150-க்கும் மேற்பட்ட உறுப்பிணர்கள் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன்படி, இன்று கோவை சுண்டக்காமுத்துர் பகுதியில் உள்ள பல நூற்றாண்டு பழமையான கிணறு தூய்மை படுத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இக்கிணற்றில் சுதை சிற்பங்கள், அழகிய கலை வேலைப்பாடுகள் நிறைந்து காணப்பட்டது. இதை தொல்லியல் துறை மூலம் ஆராய்ந்து இதன் தொன்மையை உறுதிபடுத்தும் படியும் இதனை பாதுகாக்கவும் அரசுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.



இதனைத்தொடர்ந்து, குனியமுத்தூர் செங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கரை அமைக்கும் பணியில் இன்று ஐந்து ஜே.சி.பி இயந்திரங்கள், இரண்டு டிப்பர் லாரிகள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், நாளை உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மாலை 4 மணியளவில் கோவை டாடபாத் பகுதியில் விழிப்புணர்வு தெருகூத்து மற்றும் சூழல் காக்கும் உறுதிமொழி எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...