கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவையில் அமைந்துள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த தன்னார்வ அமைப்பில், 150-க்கும் மேற்பட்ட உறுப்பிணர்கள் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, இன்று கோவை சுண்டக்காமுத்துர் பகுதியில் உள்ள பல நூற்றாண்டு பழமையான கிணறு தூய்மை படுத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கிணற்றில் சுதை சிற்பங்கள், அழகிய கலை வேலைப்பாடுகள் நிறைந்து காணப்பட்டது. இதை தொல்லியல் துறை மூலம் ஆராய்ந்து இதன் தொன்மையை உறுதிபடுத்தும் படியும் இதனை பாதுகாக்கவும் அரசுக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, குனியமுத்தூர் செங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு கரை அமைக்கும் பணியில் இன்று ஐந்து ஜே.சி.பி இயந்திரங்கள், இரண்டு டிப்பர் லாரிகள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், நாளை உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மாலை 4 மணியளவில் கோவை டாடபாத் பகுதியில் விழிப்புணர்வு தெருகூத்து மற்றும் சூழல் காக்கும் உறுதிமொழி எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.