ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

ஹோட்டல் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தி கோவை மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.



மத்திய அரசு ஹோட்டல் மற்றும் சிறுவணிகர்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரி விதித்திருப்பது, பன்மடங்கு வெளிநாட்டு நிறுவனங்களை உள்நாட்டு வணிகத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் செயலாகவே அமைகிறது. ஆகவே, மத்திய மாநில அரசுகள் உடனடியாக சிறு தொழில் வணிக நிறுவனங்களை பாதிக்காதவாறு ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்வதை வலியுறுத்தியும், மாணவர்களை பாதிக்கும் போதை தரும் மாத்திரை, பெண்களின் சிசு கருச்சிதைவு போன்ற மருந்துக்களை தடைசெய்யக் கோரியும், உயிர்காக்கும் மருந்துக்களை குறைந்த விலையில் அரசே விற்பனை செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்யவும், மத்திய மாநில அரசுகள் நெடுஞ்சாலைகளில் சுங்கவரியை குறைக்கவும், கோவை திருப்பூர் மையமாக செயல்படும் கணியூர் சுங்கசாவடியில் இருந்து 30 கிலோமீட்டர் வரை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், கோவை மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் முத்துராஜ், மாவட்ட பொருளாளர் பொன்.தங்கமரியப்பன் மற்றும் வணிகர் நலமுன்னேற்ற சங்கம், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...