கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு திடீரென வெளியேரிய காட்டு யானை போத்தனூர் அருகே 4 பேரை தாக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். மேலும், யானை தாக்குதலால் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்த விஜயகுமார் என்பரையும் அவரது 12 வயது மகள் காயத்ரியையும் யானை தாக்கியது. இதில் யானையால் மிதிக்கப்பட்ட காயத்ரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகளைக் காப்பாற்றச் சென்ற விஜயகுமாரையும் யானை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ஓடிய யானை வெள்ளலூர் பகுதியில் உள்ள ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ஜோதி, நாகரத்தினம் என்ற இரு பெண்களை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அங்கிருந்து தொடர்ந்து சென்ற யானை மேலும் மூவரை தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் வனப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ள யானையைக் காண அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அப்போது ஆர்வமிகுதியால் காட்டுப் பகுதிக்குள் இறங்கிய பழனிச்சாமி என்பவரை யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் கும்கி யானைகளில் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். தொடர்ந்து, அதனை முகாமிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, தற்போது கோவை போத்தனூர் மற்றும் வெள்ளலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வீதம் 16 லட்ச ரூபாய் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதில் யானை தாக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் குடும்பத்திற்கு ரூ.59 ஆயிரத்து 100 ரூபாய் வீதம் 11 லட்சத்து 8 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்த விஜயகுமார் என்பரையும் அவரது 12 வயது மகள் காயத்ரியையும் யானை தாக்கியது. இதில் யானையால் மிதிக்கப்பட்ட காயத்ரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகளைக் காப்பாற்றச் சென்ற விஜயகுமாரையும் யானை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ஓடிய யானை வெள்ளலூர் பகுதியில் உள்ள ரைஸ்மில் பகுதியில் கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ஜோதி, நாகரத்தினம் என்ற இரு பெண்களை தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அங்கிருந்து தொடர்ந்து சென்ற யானை மேலும் மூவரை தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் வனப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ள யானையைக் காண அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அப்போது ஆர்வமிகுதியால் காட்டுப் பகுதிக்குள் இறங்கிய பழனிச்சாமி என்பவரை யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, வனத்துறையினர் கும்கி யானைகளில் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். தொடர்ந்து, அதனை முகாமிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, தற்போது கோவை போத்தனூர் மற்றும் வெள்ளலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வீதம் 16 லட்ச ரூபாய் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதில் யானை தாக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோர் குடும்பத்திற்கு ரூ.59 ஆயிரத்து 100 ரூபாய் வீதம் 11 லட்சத்து 8 ஆயிரத்து 200 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.