மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து கோவையில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த தடை உத்திரவிற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்நிலையில் மாட்டிறைச்சியை தடை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியினர் ஊர்வலமாக நடந்து வந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையினை அவர்கள் எரிக்க முயன்ற போது காவல் துறையினர் அவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தடுப்புகளை மீறி ரயில் நிலைய வளாகத்திற்குள் செல்ல முயன்ற மனித நேய ஜனநாயக கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில் நிலைய வளாகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த தடை உத்திரவிற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்நிலையில் மாட்டிறைச்சியை தடை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியினர் ஊர்வலமாக நடந்து வந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையினை அவர்கள் எரிக்க முயன்ற போது காவல் துறையினர் அவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தடுப்புகளை மீறி ரயில் நிலைய வளாகத்திற்குள் செல்ல முயன்ற மனித நேய ஜனநாயக கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில் நிலைய வளாகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.