தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு புதிய வாகனங்கள் சேவை துவக்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. இராமசாமி கொடியசைத்து 11 ஜீப்களை 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு வழங்கினார்.



தமிழ்நாட்டில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் பாலமாக இருந்து செயலாற்றுவது குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்பங்களை மதிப்பீடு செய்தல், மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் முதல் நிலை செயல்விளக்கங்கள் மூலம் புதிய இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பரவலாக்கம் செய்தலை முதன்மைக் குறிக்கோள்களாக கொண்டு வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள 30 வேளாண்மை அறிவியல் நிலையங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 14 வேளாண் அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் வேலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆற்றிய சாதனைகளுக்காக “சிறந்த மண்டல வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கான விருதை” பெற்றுள்ளது. 

மேலும், கடலூர் வேளாண் அறிவியல் நிலையம் தேசிய அளவில் சிறந்த பயறுவகை பயிர்களுக்கான கூட்டு முதல்நிலை செயல் விளக்கத்திடலுக்கான விருதை பெற்றுள்ளது.

உழவர் பெருமக்களின் நன்மைக்காக விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், இப்பல்கலைக்கழகம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் 11 வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு ரூபாய் 92 லட்சம் செலவில் 11 பொலிரோ ஜீப்களை வாங்கியுள்ளது.

இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் கொடியசைத்து வைத்து, வாகனங்களை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

முனைவர் ஹெ. பிலிப், விரிவாக்கக் கல்வி இயக்குநர், பொறியாளர் எஸ். செந்தில் குமார், வளாக அலுவலர், பல்கலைக்கழக இயக்குநர்கள் மற்றும் துறை தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...