மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் செயல் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்ந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. அதனை இனி வரும் காலங்களில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
தற்போது மாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள விற்பனை உள்ளிட்ட மத்திய அரசின் அறிவிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை முற்றிலும் பின்வாங்கச் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
அனைத்து கட்சிகளையும் அழைத்து குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் முடிவை பொறுத்து தங்களின் முடிவை அறிவிக்க உள்ளோம். மாநிலக் குழு கூட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும். கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது" இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்ந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. அதனை இனி வரும் காலங்களில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
தற்போது மாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள விற்பனை உள்ளிட்ட மத்திய அரசின் அறிவிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை முற்றிலும் பின்வாங்கச் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
அனைத்து கட்சிகளையும் அழைத்து குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் முடிவை பொறுத்து தங்களின் முடிவை அறிவிக்க உள்ளோம். மாநிலக் குழு கூட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும். கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது" இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.