போளுவாம்பட்டி வனப்பகுதியில் குட்டி யானை பலி

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிபுரம் வனப்பகுதியில் இரண்டு மாதங்களே ஆன குட்டி யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 



இந்த குட்டி யானை உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் வன விலங்குகள் இதன் உடலை உண்டுள்ளதால் இந்த யானை ஆண் யானையா அல்லது பெண் யானையா என சரியாக தெரியவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வனச்சரகம் அருகே கேரள எல்லைப் பகுதியில் ஒரு யானை உயிரிழந்தது. அந்த யானை எவ்வாறு உயிரிழந்தது என தெரியாத நிலையில் தற்போது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் குட்டி யானை உயிரிழந்துள்ளது.

இந்த குட்டியானையின் உடல் பாகங்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே யானை உயிரிழந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...