கோவையில் டாஸ்மாக் கடைகளை அடைக்க கோரிய பொதுமக்களின் போராட்டம் வெற்றி


கோவை சவுரிபாளையம் பகுதியில் 2 கிமீ சுற்றளவுக்குள் நான்கு டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என சவுரிபாளையம் பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், டாஸ்மாக் கடைகள் அகற்றப்படாததை தொடர்ந்து இன்று மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அறிவித்திருந்தனர். தொடர்ந்து, வரும் ஜுன் 4-ம் தேதி டாஸ்மாக் கதவடைப்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர்.



இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி 500-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் பார் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்ற மக்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



இதை தொடர்ந்து, அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், போராட்டத்தை கைவிடுமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். ஆனால், கலைந்து செல்ல மறுத்த பொதுமக்கள் அதிகாரிகள் வந்து கடைகளை மூடுவதாக உறுதியளிக்க வேண்டும் என்றும் உறுதி வழக்கப்படாவிட்டால் போராட்டம் கைவிடப்படமாட்டாது என்றும் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதை தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த டாஸ்மாக் அதிகாரி விஜயசண்முகம் மற்றும் கோவை தெற்குப்பகுதி தாசில்தார் பக்தவச்சலம் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வரும் 3-ம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என்று உறுதியளித்தனர். 

இதை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...