கடுமையான வெயிலில் மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிகிறது!

அக்னி நட்சத்திரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடல்பகுதியில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்று வீசத் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் மே 4ஆம் தேதி தொடங்கியது. 28ஆம் தேதி ஞாயிறு இன்றுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து படிப்படியாக வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. பருவ மழை பொய்த்திருந்த நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. மற்ற ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கடுமையான வெயில் தாக்கம் இருந்ததாகவே அறியப்பட்டது. பெரும்பாலான நகரங்களில் 110 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வந்தது. இந்த நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ளது. எனவே வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...