கோவை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.13.75 கோடி மதிப்பிலான 1.59 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
“கோit மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வடவள்ளி, வார்டு-16, நியூ ஹேப்பி கார்டன் மற்றும் தட்டன் தோட்டம் பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 24.8 சென்ட் அளவிலான இடங்களும், வடவள்ளி, வார்டு-16, ராஜன் நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 31.55 சென்ட் அளவிலான இடங்களும், வடவள்ளி, வார்டு-16, பாலாஜி பத்மாவதி நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 31.55 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று கிழக்கு மண்டலம், காளப்பட்டி, வார்டு-36, மதுசூதனன் நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 20 சென்ட் அளவிலான இடங்களும், விளாங்குறிச்சி, வார்டு- 56, ஹவுசிங் யூனிட் பகுதியில் பொது ஒதுக்கீடு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளும், வடக்கு மண்டலம், சரவணம்பட்டி, வார்டு-31, ஸ்ரீ மாருதி நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.25 கோடி மதிப்பிலான 16 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் தெற்கு மண்டலம், குமாரபாளையம், வார்டு-76, சோமு அவென்யூ பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3.50 கோடி மதிப்பிலான 35 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம், சுமார் ரூ.13.75 கோடி மதிப்பிலான 1.59 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
“கோit மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வடவள்ளி, வார்டு-16, நியூ ஹேப்பி கார்டன் மற்றும் தட்டன் தோட்டம் பகுதியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 24.8 சென்ட் அளவிலான இடங்களும், வடவள்ளி, வார்டு-16, ராஜன் நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 31.55 சென்ட் அளவிலான இடங்களும், வடவள்ளி, வார்டு-16, பாலாஜி பத்மாவதி நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 31.55 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று கிழக்கு மண்டலம், காளப்பட்டி, வார்டு-36, மதுசூதனன் நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 20 சென்ட் அளவிலான இடங்களும், விளாங்குறிச்சி, வார்டு- 56, ஹவுசிங் யூனிட் பகுதியில் பொது ஒதுக்கீடு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளும், வடக்கு மண்டலம், சரவணம்பட்டி, வார்டு-31, ஸ்ரீ மாருதி நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.25 கோடி மதிப்பிலான 16 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் தெற்கு மண்டலம், குமாரபாளையம், வார்டு-76, சோமு அவென்யூ பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3.50 கோடி மதிப்பிலான 35 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம், சுமார் ரூ.13.75 கோடி மதிப்பிலான 1.59 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.