டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக் கோரி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் உண்ணாவிரதம்

டாஸ்மாக் ஊரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் , டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று அரசுப்பணி வழங்கக் கோரியும் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள்  இன்று கோவை சிவானந்தா காலனி பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.



மதுக்கடைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்களால்  சில இடங்களில் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



மேலும், இந்த போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கு மாற்றுப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணி வழங்க வேண்டும் எனவும் வலியுத்தினர். மேலும், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து மற்ற அரசு பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...