ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் வருகிற மே 30 ஆம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.



கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

மத்திய அரசு வரும் ஜூலை மாதம் அமல்படுத்த உள்ள பொதுவான சரக்கு மற்றும் சேவை வரியில் உணவகங்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது ஏசி ரெஸ்டாரண்ட்டுகளுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதனால் உடனடியாக ஹோட்டல் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினை குறைக்க வலியுறுத்தி வருகிற மே 30 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பேக்கரி மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட உள்ளன. இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஒன்றரை லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு ஆதரவளிக்க உள்ளன. மேலும், இப்போராட்டத்தின் காரணமாக 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட உள்ளது என கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...