இளைஞர்களால் தான் நாட்டில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரமுடியும்- லாரன்ஸ் பள்ளி ஆண்டு விழாவில் இந்திய ஜனாதிபதி சிறப்புரை

உதகையில் செயல்பட்டு வரும் லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



அன்பிற்குரிய பெரியோர்களே, தாய்மார்களே அனைவருக்கும் வணக்கம், லாரன்ஸ் பள்ளியின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நல்ல நாளில் மேதகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் அவர்களுக்கும், தலைமையாசிரியை சங்கீதா சீமா அவர்களுக்கும், பள்ளியின் நிர்வாக அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் பெருமைமிக்க பெற்றோர்களுக்கும், வரலாற்று சிறப்புமிக்க இப்பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுக்கும் முதற்கண் என் வணக்கங்களைக் கூறிக்கொள்கிறேன்.

இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கும் உற்சாகமுள்ள இளைய மாணவர்களிடையே உரையாட கிடைத்த இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. கம்பீரத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நீங்கள் இந்திய தேசிய கொடியுடனும் உங்கள் பள்ளியின் கொடியுடனும் பெருமையுடன் நடத்திய அணிவகுப்பு உங்கள் பள்ளி மிகவும் சிறப்பாக செயல்படுவதை எனக்கு நிரூபிக்கின்றது.

என் அனுபவத்தில் எந்தஒரு நாடானாலும் அந்நாட்டின் இளைஞர்களால் தான் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரமுடியும். என் தலைமுறையும், பிந்தைய, முந்தைய தலைமுறைகளும் நமது இந்தியாவை இதுவரை செலுத்திக்கொண்டு வந்ததை இனி இளைய சமுதாயமான நீங்கள் முன்னெடுத்து உலக நாடுகள் நம் பிரகாசமான வரலாறுக்காக மட்டுமல்லாமல் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உயர்வாக இந்தியாவை மதிப்பீடு செய்யும்படி செய்ய வேண்டும்.

இயற்கையில் தாவரங்கள் தான் வேரூன்றி நின்று வாழ்வதுடன் தன் விதைகளை பரப்பி விருட்சங்களைப் பரப்பி தொடர்ந்து மலரச் செய்கின்றன. இந்த ஒப்புமை நமது பண்டைய இந்தியாவின் கலாச்சாரத்திற்கும் பொருந்தும். அது இந்தப் பள்ளியிலும் தொடர்வதைக் காண்கிறேன்.

159 வருட பாரம்பரியத்தையும், உயரிய மதிப்பினையும் கொண்டு உங்களுக்கு ஆணிவேராக இப்பள்ளி விளங்குகிறது. இந்த உறுதியான அடித்தளத்தின் மேல் வாழும், குழந்தைகளான நீங்கள், இந்தப்பள்ளியையும், சமுதாயத்தையும் வளர்ச்சியின் சிகரத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் கல்வி மட்டுமின்றி அனைத்து துறைகள் ஒன்று சேர்ந்த சங்கமமாய் பயில்வதை அவர்களின் பாக்கியம் என்று தான் நான் கணிக்கிறேன். இந்த பயிற்றுவித்தல் மற்றும் உங்களின் தனித்துவம், சுதந்திரமான உறைவிடப்பள்ளி அனுபவம் ஒரு அரிய பரிசு. இந்த அரிய படிப்பினையை உங்களை சார்ந்த அத்தனை பேருக்கும் பரப்புங்கள். அதன் மூலம் உங்களை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதன் பலனை பெறட்டும்.

இதுபோன்ற மைல் கற்களை கடந்து வரும் இந்தப் பள்ளிக்கு பெற்றோர்களின் உறுதியான ஆதரவு எவ்வளவு உள்ளது என்பதை இங்கு திரளாக வந்திருப்பதைக்கண்டே உணர முடிகிறது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். உறைவிடப்பள்ளி மாணவர்களின் உருவாக்கத்திற்கு பள்ளியின் பங்கு மிக அவசியம். அதேபோல் பெற்றோர்களின் ஆதரவும் ஊக்கமும் மிக அவசியமாகிறது. 

இந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் அவரவர் துறைகளில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருப்பதாக நான் அறிகிறேன். அவர்களைப் போல் நீங்களும் உச்சத்தை அடைய வாழ்த்துகிறேன். அவர்களை உங்களுக்கு தூண்டுதலாகக் கொள்ளுங்கள். இது பொருள்சார்ந்த முதலாளித்துவ வளர்ச்சியாக மட்டுமில்லாமல் சமூக சேவையையும் உங்களின் இலக்காக கொள்ளுங்கள்.

160 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் இந்தப்பள்ளியின் சாதனையை முந்தக் கூடிய பள்ளிகள் அதிகமில்லை. இந்தப் பள்ளியின் முந்தைய மகிமையை மீட்டு தக்கவைத்துக் கொண்டு அதேசமயம் இந்தப்பள்ளியின் நம்பகமான பெயரை புதுஉயரங்களுக்குக் கொண்டுச் செல்லும் திருமதி சங்கீதா சீமா அவர்களை வாழ்த்துகிறேன்.



இந்தப்பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் இந்தப் பள்ளியின் தூண்களாக இருப்பதற்கு என் வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் இறைவன் அருள்புரிய வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் உங்கள் கனவுகள் மற்றும் மனம் விரும்பிய செயல்களில் வெற்றிப்பெற்று உங்கள் மனதிற்கு நெருக்கமான உங்கள் பள்ளியை மேலும் குறைந்தது 159 வருடங்களுக்கு பள்ளியின் கொடியை பறக்க விடுங்கள்.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...