அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.
குடியரசு தலைவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குடிமராமத்து, அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி போன்ற மாவட்டங்களுக்கு தேவையான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகின்றது.
நேற்று எம்.எல்.ஏ-க்கள் முதல்வரை சந்தித்து தொகுதி கோரிக்கைகளை தெரிவிக்கவே வந்தனர். எம்.ஏல்.ஏ கூட்டத்தை கூட்டச்சொன்னது குறித்து தனக்கு தெரியாது" என கூறினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தடம் புரள்வதாக ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, இரண்டு அணியும் ஒன்றாக சேரவேண்டும் என்பதே தனது கருத்து' என்றார்.
மேலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் தவறில்லை என தெரிவித்தார். பத்திரிகையில் எதாவது செய்தி வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் சொல்வதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
குடியரசு தலைவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குடிமராமத்து, அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி போன்ற மாவட்டங்களுக்கு தேவையான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகின்றது.
நேற்று எம்.எல்.ஏ-க்கள் முதல்வரை சந்தித்து தொகுதி கோரிக்கைகளை தெரிவிக்கவே வந்தனர். எம்.ஏல்.ஏ கூட்டத்தை கூட்டச்சொன்னது குறித்து தனக்கு தெரியாது" என கூறினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தடம் புரள்வதாக ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, இரண்டு அணியும் ஒன்றாக சேரவேண்டும் என்பதே தனது கருத்து' என்றார்.
மேலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் தவறில்லை என தெரிவித்தார். பத்திரிகையில் எதாவது செய்தி வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் சொல்வதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.