இந்திய விமானப் படையின் ஏர்மேன் பணிக்காலியிடத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் 2017 செப்டம்பர் மாதம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில், கலந்துகொள்ள விரும்பும் மனுதாரர்கள் 12 ஆம் வகுப்பு மொத்த மதிப்பெண்களில் 50 சதவிகித மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 50 சதவிகித மதிப்பெண்ணும் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், 1997 ஜூலை 7 மற்றும் 2000 டிசம்பர் 20-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடப்பட உள்ளன. பாடக்குறிப்புகளுடன் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.
இவ்வகுப்பில் ஏர்மேன் ரெக்யுப்மென்ட் போர்டின் அலுவலர்கள் கலந்துகொண்டு இத்தேர்வின் முந்தைய வினாக்கள் மற்றும் இத்தேர்விற்கு தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்குவர்.
இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு பயிற்சி பெற்று பயனடையலாம்.
மேலும், கூடுதல் விவரங்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பயிற்சி பெற்று அரசாங்க பணியில் சேர்ந்து பயடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடப்பட உள்ளன. பாடக்குறிப்புகளுடன் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.
இவ்வகுப்பில் ஏர்மேன் ரெக்யுப்மென்ட் போர்டின் அலுவலர்கள் கலந்துகொண்டு இத்தேர்வின் முந்தைய வினாக்கள் மற்றும் இத்தேர்விற்கு தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்குவர்.
இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு பயிற்சி பெற்று பயனடையலாம்.
மேலும், கூடுதல் விவரங்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பயிற்சி பெற்று அரசாங்க பணியில் சேர்ந்து பயடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.