இந்திய விமானப் படையில் பணிபுரிய கோவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு

இந்திய விமானப் படையின் ஏர்மேன் பணிக்காலியிடத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் வரும் 2017 செப்டம்பர் மாதம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில், கலந்துகொள்ள விரும்பும் மனுதாரர்கள் 12 ஆம் வகுப்பு மொத்த மதிப்பெண்களில் 50 சதவிகித மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 50 சதவிகித மதிப்பெண்ணும் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், 1997 ஜூலை 7 மற்றும் 2000 டிசம்பர் 20-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடப்பட உள்ளன. பாடக்குறிப்புகளுடன் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். 

இவ்வகுப்பில் ஏர்மேன் ரெக்யுப்மென்ட் போர்டின் அலுவலர்கள் கலந்துகொண்டு இத்தேர்வின் முந்தைய வினாக்கள் மற்றும் இத்தேர்விற்கு தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்குவர்.

இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டு பயிற்சி பெற்று பயனடையலாம். 

மேலும், கூடுதல் விவரங்களை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பயிற்சி பெற்று அரசாங்க பணியில் சேர்ந்து பயடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...